மூன்று , நான்கு தசாப்த காலங்களாக ஏதோ ஒரு காரணத்திற்காக வெளிநாடுகளில் குடிபெயர்ந்து அல்லது தஞ்சம் புகுந்து அந்த நாட்டின் பிரஜைகளாக வாழ்பவர்கள் இந்த நாட்டின் சொத்துக்கள் என்று உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. நாவின்ன தெரிவித்தார்.
பத்தரமுல்ல, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இன்று நடைபெற்ற 23ஆவது இரட்டைக்குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் அமைச்சர் உரையாற்றுகையில், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் விரும்பியோ விரும்பாமலோ இந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தவர்கள் ஏராளம். நீங்கள் உங்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி வந்து வாழ்வதற்கு கூட இந்த நாட்டின் விசா தேவைப்பட்டது. அப்படியே விசா பெற்றுக்கொண்டாலும் ஒரு சில மாதங்களில் புதுப்பிக்கவேண்டும் அல்லது வாழந்த நாட்டிற்கு திருப்பவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனை கருத்தில்கொண்டு இடைக்காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த இரட்டைபிரஜாவுரிமை செயற்பாடுமீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஆகியோரது எதிர்பார்ப்பாக இருந்தது.
எனவே அவர்களது கோரிக்கைகளுக்கு அமைவாக 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலே விசேட சட்டமூலம் உருவாக்கப்பட்டு இந்த பிரஜாவுரிமை வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்ட்டது. இச்செயற்பாட்டின் மூலம் இதுவரையிலே , இன்று வழங்கப்படும் 840 சான்றிதழ்கள் உள்ளிட்ட 33840 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்றவையாகும் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டின் வளங்கள் நீங்கள் . எமது எதிர்பார்ப்பு நீங்கள் அனைவரும் இந்த நாட்டிற்கு மீண்டும் வந்து , இந்த நாட்டின் உரிமையாளர்களாக வேண்டும் என்பதே. உங்கள் சேவைகள் இந்த நாட்டிற்கு தேவையாக இருப்பதை நீங்கள் உணரவேண்டும். நீங்கள் வெளிநாடுகளில் வைத்தியர்களாகவோ, பொறியியலாளர்களாக அல்லது வேறு உத்தியோகத்தர்களாக மற்றும் வியாபாரிகளாக கடமையாற்றக்கூடும். உங்கள் பிள்ளைகள் அங்கே மாணவர்களாக கல்வி பயில்பவர்களாகவும், பயின்றவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்கள் அனைவரும் உங்கள் சொந்தநாடான இலங்கைக்கு வருகை தரவேண்டும். உங்களுகடைய முலீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் இந்த நாட்டிற்கு மிகமிக அவசியமானது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை தாய்திருநாட்டிற்கு உங்கள் சேவை மீண்டும் முற்றுமுழுதாக கிடைக்கவேண்டும் என்பதே நமது அபிலாஷை. நீங்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமையும் கொண்டவர்கள் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் , விசா மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான ஷெட்டியாராச்சி உள்ளிட்ட பல அதிகாரிகள் மற்றும் இன்றையதினம் இரட்டைகுடியுரிமை சான்றிதழ் பெற்றுக்கொள்பவர்கள் கலந்துகொண்டனர்.