சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கமைய பூத்தல ஒக்கம்பிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதானவர் 66 வயதுடைய நபரென ஒக்கம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமிக்கு 12 வயது. சந்தேகநபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.