சவளக்கடை பொலிஸ் பிரிவினுள் அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் கால்நடையாக கொண்டு வந்த 23 பசு மாடுகளையும் கைப்பற்றியதோடு அதனை கொண்டு வந்த ஒருவரையும் நேற்று மாலை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்முனை நற்பிட்டிமுனை பிரதேசத்திற்கு மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திற்கு மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்ட விரோதமான முறையில் கால்நடையாக பசுக்களை கொண்ட வருவதாக சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து 23 பசு மாடுகளையும் அதனுடன் தொடர்புடைய நற்பிட்டிமுனையை சேர்ந்த ஒருவரையும் கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட மர்டகளையும் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபரையும் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.