இவ்வருடம் பாடசாலைகளில் 200 டிஜிட்டல் வகுப்பறைகள் ஆரம்பிக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உரையாற்றுகையில் ;
“துரிதமாக மாற்றமடைந்து வரும் உலகில் நாம் வசிக்கின்றோம். அதற்கு ஏற்றவாறு கல்வி துறையில் மாற்றங்கள் செய்யாவிட்டால் எமது மாணவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொள்வார்கள். இதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எவ்வித தயக்கமும் இன்றி மேற்கொள்வோம். இவ்வருடம் 200 டிஜிட்டல் வகுப்பறைகளை ஆரம்பிப்போம். வட கிழக்கு மாகாணங்களில் ஒருசில பாடங்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை. டிஜிட்டல் வகுப்பறைகளை அமைத்தால் கொழும்பில் ஒரு பாடசாலையில் கற்பிக்கப்படும் விடயங்கள் ஏனைய பாடசாலைகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பாடங்களை போதிக்கலாம். முப்பரிமான வசதிகளுடன் டிஜிட்டல் வகுப்புகளில் மாணவர்கள் தமது கற்கை நெறிகளை மேற்கொள்ளலாம்.” என தெரிவித்தார்
[ot-video type=”youtube” url=”https://youtu.be/9Nq_eOgEl4M”]
தொம்பே தே விபாலிகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்கை நிலைய கட்டிடத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது. 100 மில்லியன் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா, பாடசாலை அதிபர் திருமதி ஏ.ஆர். பி.நந்தனி பியசேகர உட்பட பலர் கலந்து கொண்டனர்.