சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 மீனவர்கள கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ரவுண்ட் தீவு கடற்பகுதி மற்றும் வேருகல் பகுதியில் வைத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 5 வலைகள் மற்றும் 4 டிங்கி படகுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. கிழக்கு கடற்படை அதிகாரிகள் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் திருகோணமலை மற்றும் வேருகல் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.