கல்வி அமைச்சுக்கு முன்னால் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றிய போதும் இவர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்பட வில்லையென்பதே இவர்களின் கோரிக்கையாகும். தங்களுக்கான தேர்வு பரீ’ட்சைகள் நிறைவடைந்துவிட்ட நிலையிலும் தமக்கு நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்தனர். இவ்வி;டயத்தில் ஜனாதிபதி அவதானம் செலுத்தி தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென இவர்கள் தெரிவித்தனர்.