தென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கரையோர ரோந்து படகொன்றின் மூலம் கடந்த 16ம் திகதி கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 26 கடல் மைல் தொலைவில் பாதிக்கப்பட்ட 4 மீனவர்களையும் பாதுகாப்பான முறையில் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
“கமிலா II “எனப் பெயரளிக்கப்பட்ட குறித்த மீன் பிடி படகு கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக புறப்பட்டு சென்றுள்ளது.
சிறிய இராவணன் (Little bases) கலங்கரை விளக்கின் அருகே பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து பற்றி கிரிந்தை மீன்வளத்துறை பரிசோதனை அலுவலகம் மூலம் தெரிவித்த பின் உடனடியாக ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த தென் கடற்படை கட்டளையின் கறையோர படகு மூலம் குறித்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் .
மேலும் காப்பாற்றபட்ட மீனவர்களை பாதுகாப்பாக கிரிந்தை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.