பாகிஸ்தான் அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிக்கப்படுமென பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறையில் நிலவும் மோசமான சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் அரசாங்கம்பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போதைய பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகளை அமுல்படுத்துவதற்காகவே இவ் இடைக்கால வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படுகின்றது. சமூகத்தில்நிலவும் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு தமது அரசாங்கம் முக்கியத்துவமளிக்குமென பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.