சீனாவை நோக்கி பயணிக்கவிருந்த நிலையில் சூறாவளி காரணமாக தனது பயணத்தை இடைநிறுத்தியிருந்த விமானம் தனது பயணத்தை இன்று 1.44 மணியளவில் மேற்கொண்டது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சீனாவுக்கு பயணமாகவிருந்த யூ.எல்.880 விமானமே இன்று அதிகாலை பயணமானது.சீனாவை பாதித்துள்ள மென்குட் சூறாவளி காரணமாக சீனாவுக்கு செல்லவிருந்து பல நாடுகளின் விமான சேவை இடை நிறுத்தபப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.