இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு மதுபான வகைகளை உடமையில் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.34 வயதுடைய தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரிடமிருந்து 11 லீட்டர் வௌிநாட்டு மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.