நடக்கவே முடியாத ஒரு விடயத்தை நினைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கனவு காணுவதாகவும் அடுத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனதான் எனவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
நிமிடத்திற்கு நிமிடம் மாறி மாறி பேசும் முன்னாள் ஜனாதிபதியின் கருத்துக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கும் விடயத்தில் மஹிந்த ராஜபபக்ஷ மற்றும் அவருடைய தரப்பினர் பல்வேறு விதமாக விமர்சித்தார்கள்.தற்போது இந்தியா சென்று அந்நாட்டு அரச தலைவர்களை சந்தித்துள்ளனர்.வருமானம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டே மத்தலை விமான நிலையம் அமைக்கப்பட்டது.ஆனால் ஏனைய விமான நிலையங்களில் இடம்பெறும் வழமையான விடயங்கள் கூட இடம்பெறுவது மிகக்குறைவாகும்.இதன் மூலம் அரசாங்கத்திற்கு எந்தவொரு வருமானமும் கிடைப்பதில்லை.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தனது சகோதரர்களில் ஒருவர் நியமிக்கப்படுவார் என இந்திய ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.அது ஒருபோதும் இடம்பெறாது.மீண்டும் ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்குவதற்கு பொது மக்கள் இடமளிக்கப்போவதில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.