ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா இச்சூழ்ச்சியை மேற்கொண்டதாக, ஊழல் எதிர்ப்பு அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கு அமைய பொலிஸ்மா அதிபர் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதியமைச்சர் நளின் பண்டார கருத்து தெரிவித்தார்.
“அண்மை காலங்களில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா தொடர்பில் இலங்கை பொலிசாரும் பொலிஸ் ஆணைக்குழுவும் விசாரணைகளை நடத்த ஏற்பாடுககளை மேற்கொண்டுள்ளன. பிரதமருக்கும் இவ்விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார வெளிநாட்டில் இருந்த போதிலும் அவர் தேவையான ஆலோசனைகளை எமக்கு வழங்கியுள்ளார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளுக்கு புறம்பாக இவ்விடயம் தொடர்பில் விசேட தீர்மானம் ஒன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.”
[ot-video type=”youtube” url=”https://youtu.be/JUikkUIk55Y”]