கற்குவியல் புறண்டு விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று திம்புள– பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தகப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கினிகத்தேன பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கல்லுடைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே குறித்த நபர் மீது கருங்கற்கள் புறண்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.