இன்று மதியம் 12 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விஷேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களான ரஊப் ஹக்கீம் மனோகணேசன் மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் இந்த விஷேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகின்றது.
குறித்த இன்றைய விஷேட அமைச்சரவை கூட்டத்திற்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.