எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் விலை சூத்திரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஒக்டெய்ன் 92 மற்றும் 95 வகை பெற்றோல் ஒரு லீற்றர் 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் பணிப்பாளர் அலி ஹசன் தெரிவித்துள்ளார். அதற்கமைய ஒக்டெய்ன் 92 ரக பெற்றோலை 149 ரூபாவுக்கும், ஒக்டெய்ன் 95 ரக பெற்றோலை 161 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யமுடியும். இதேவேளை டீசலின் விலை 5 ரூபாவாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.