முதியவர்கள் மற்றும் விசேட தேவையுடையவர்களின் மேம்பாட்டுக்கென செனேஹச எனும் பெயரில் சீட்டிழுப்பு ஒன்றை ஆரம்பிக்க போவதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/-P-wTnSOABY”]
விசேட தேவையுடையவர்களின் தேசிய கலாசார நிகழ்வும் சுவஷக்தி அபிமாணி 2018 விருது வழங்கும் நிகழ்வும் அண்மையில் தாமரை தடாக அரங்கில் அமைச்சர் தயா கமகே தலைமையில் இடம்பெற்றது. சமூக சேவை திணைக்களமும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சும் இதனை ஒழுங்கு செய்திருந்தன. அமைச்சின் செயலாளர் பந்து விக்ரமரட்ன உள்ளிட்ட பலர் இதில் இணைந்திருந்தனர்.