நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். முதலமைச்சர் உள்ளிட்ட மூவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனை அப்பதவியில் இருந்து அகற்ற வடமாகாண முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவொன்றை பிரப்பிக்குமாறு கோரி டெனீஷ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார். டெனீஷ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு முதலமைச்சர் எடுத்த தீர்மானத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அப்பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அதனை செயற்படுத்தமையினால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனீஷ்வரன் மனு தாக்கல் செய்தார்.