கண்டி பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு புதிய வைத்திய உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறும். இருதய நோய் சிகிச்சை பிரிவு மற்றும் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் தீவிர சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றுக்கான உபகரணங்களே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 20 மில்லியன் ரூபா செலவில் குறித்த உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.