ருபெல்லா நோயை இல்லாதொழித்த நாடாக உலக சுகாதார அமைப்பினால் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சான்றிதழ் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் இந்தியாவின் புதுடில்லி நகரில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்காசிய வலய அமர்வின்போது சான்றுபத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மலேரியா நோயை இல்லாதொழித்த நாடாக இலஙகை கடந்த 2015ம் ஆண்டு பெயரிடப்பட்டது. தற்போது இலங்கைக்கு பல்வேறு வெற்றிகள் கிடைக்கப்பெற்று வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.