ஜப்பானில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் 82 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹொகைடோ தீவை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஜப்பான் செய்திகள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும் நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. 30 இலட்சம் வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு அனர்த்த அபாயமும் காணப்படுவதாக அந்நாட்டு காலநிலை அவதான மையம் தெரிவித்துள்ளது.