சுனாமி அனர்த்தத்துக்கு முகம்கொடுப்பதற்கு பிராந்திய நாடுகளை தயார்படுத்தும் நோக்கில் 28 நாடுகளில் இன்று சுனாமி ஒத்திகை இடம்பெறுகிறது.
இதில் இலங்கையும் கலந்துகொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள 3 மாவட்டங்களில் 6 கிராம சேவகர் பிரிவுகளில் இந்த ஒத்திகை இடம்பெற்றது. இதனடிப்படையில் இன்று 8.30 மணிக்கு இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட இடங்களிலும் நாடு முழுவதிலுமுள்ள 77 சுனாமி எச்சரிக்கை நிலையங்ளில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
காரைதீவில் சுனாமி அனர்த்த ஒத்திகை இன்று இடம்பெற்றது.
ஒத்திகைக்கான அலார ஒலி காலை 9மணிக் இடமபெற்றது.