பிரான்ஸில் பாடசாலை மாணவர்கள் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்துவதை தடை செய்யவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய பாடசாலை நேரங்களில் மாணவர்கள் கையடக்கதொலைபேசியை பயன்படுத்த முடியாது. உரிய கல்வி தவணை ஆரம்பமாவதற்கமைய சட்டத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை தூண்டும் வகையிலும் பல்வேறு சமூக மோசடிகளிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையிலும் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த புதிய நடவடிக்கையால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படக்கூடுமெனவும் அதற்கு தாம் முகம்கொடுக்க தயாரெனவும் பிரான்ஸ் கல்வியமைச்சர் ஜீன் மைக்கல் தெரிவித்துள்ளார்.