நேபாளத்தில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்குபற்றி அம்மாநாட்டின் தலைமை பதவியை அலங்கரித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடு திரும்பினார்..
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தனர். பிம்ஸ்டெக் மாநாட்டின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. செங்கம்பளத்தின் ஊடாக விமான நிலையத்தின் விசேட அதிதிகளுக்கான பகுதிக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அங்குஇடம்பெற்ற சமய நிகழ்வுகளில் கலந்து கொண்டு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொண்டார். அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியின் நேபாள விஜயம் தொடர்பான மேலும் பல தகவல்கள் இரவு 8 மணி பிரதான செய்தியில் ஒளிபரப்பபடும்.