15வது ஏற்றுமதி கிராமம் இன்று திறக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறவுள்ளது. குறித்த கிராமத்தினூடாக பதிக் தொழிற்துறை அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். அம்பாறை நவகம்புர பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த ஏற்றுமதி கிராமத்திற்கு 10 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. பதிக் தொழிற்துறையில் பயிற்சிகளை பெற்ற 500 பெண்களை குறித்த கிராமத்தில் தொழிலுக்கென அமர்த்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 500 ஏற்றுமதி கிராமங்களை அமைக்கும் இலக்கை அடையும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.