தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கென அறவிடப்படும் கட்டணத்தில் இன்று முதல் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. 15 வயதை பூர்த்திசெய்த அனைவரும் தமது அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்கென இன்று முதல் 100 ரூபா கட்டணம் செலுத்தவேண்டுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள 250 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளது. காணாமல்போன தேசிய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள 500 ரூபா கட்டணத்தை செலுத்தவேண்டும். கிராம சேவகர் அலுவலகம் அல்லது பிரதேச செயலகங்களில் கட்டணங்களை செலுத்தி, அதற்கான பற்றுச்சீட்டை தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பத்துடன் இணைந்து அனுப்பிவைக்க வேண்டுமென ஆட்பதிவு திணைக்;களம் தெரிவித்துள்ளது.