சேதன பசளை பயிர்ச்செய்கைக்கு நிவாரணம் வழங்குவதற்கான சுற்றுநிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. சேதன பசளை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெயருக்கு 18 ஆயிரம் ரூபாவும், இரண்டு ஹெக்டெயருக்கு 30 ஆயிரம் ரூபாவும் நிவாரணத்தொகையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென அமைச்சு குறிப்பிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் அதிக விவசாயிகள் சேதன பசளையை பயன்படுத்துகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.