மொனராகலையில் இடைபெறும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியின் இறுதிநாள் இன்றாகும். நேற்றைய தினத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். மாலை வேளையில் பெய்த அடைமழைக்கு மத்தியிலும் மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்கள். கண்காட்சி கடந்த 29ம் திகதி ஆரம்பமானது முதல் நேற்று இரவு வரை அதிகளவிலானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.