கூகுள் , பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக ஊடக வலைத்தளங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சமூக வலைத்தளங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்குவதாக அவர் தெரிவிக்கின்றார். இவற்றை ஒழுங்குப்படுத்துவதற்காக டிரம்ப்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கூகுல் நிறுவனம் எவ்வித அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கோ, அல்லது எவ்வித அரசியல் கருத்துக்களுக்கு பக்கச்சார்பாக செயல்படுவதில்லையென கூகுல் நிறுவனம் அறிவி;த்துள்ளத. எவ்வாறாயினும் போலியான தகவல்களை வழங்கி கூகுள் நிறுவனம் பொது மக்களிடமிருந்து கூடுதலான பிரதிலாபகங்களை பெற்றுக் கொள்வது பாரிய குற்றமாகுமென அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். பேஸ்புக், டுவிட்டர் தொடர்பாக இதுவரை பெரும்பாலான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக வலைத்தளங்கள் தொடர்பாக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து டிரம்ப் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.