தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தின் அடுத்த தலைவராக மறைந்த கலைஞர் கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெற்ற கட்சி பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றி அவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து வருட காலமாக தி.மு.க தலைவராக மு.கருணாநிதி செயற்பட்டு வந்த நிலையில் அண்மையில் அவர் காலமானார். அதனையடுத்து கட்சியின் தலைமைப்பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் தலைவர் பதவிக்காக ஸ்டாலின் மாத்திரமே மனு தாக்கல் செய்திருந்தார். அதற்கமைவாக அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.