மியன்மார் இராணுவ தளபதிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மியன்மாரில் ரக்கெய்ன் மாநிலத்தில் இடம்பெற்ற குற்றங்களும் அவை முன்னெடுக்கப்பட்ட விதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்லவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இ;நநிலையில் இராணுவத்தின் உயரதிகாரிகள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென மியன்மாருக்கான ஐ.நா வின் சுயாதீன சர்வதேச குழு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.