ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹனீப் எட்மார் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய புதிய ஆலோசகராக ஹம்துல்லா மொஹிப் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இதற்கு முன்னர் அமெரிக்காவுக்கான, ஆப்கானிஸ்தான் தூதுவராக செயற்பட்டவராவார். முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகியமைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும் ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலர் பதவி விலகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.