தேசிய சம்பள கொள்கையொன்றை தயாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெறும். 15 பேரை கொண்ட சம்பள ஆணைக்குழுவில் முன்னாள் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான எஸ்.ரணுக்கே தலைவராக செயற்படுகின்றார். இதேவேளை குறித்த குழுவினூடாக சகல அரச கட்டமைப்புக்களிலும் சம்பளம் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, ஒரு புதிய சம்பள கட்டமைப்பை தயாரிக்கப்படும். இது தொடர்பில் ஆணைக்குழு உறுப்பினர்களை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.