நாட்டில் நேற்றிரவு முதல், இன்று காலை வரை இடம்பெற்ற 8 வாகன விபத்துக்களில் 10 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெக்கிராவ, கொச்சிக்கடை, மீரிகம, கல்குடா, கொடகவெல, மஹவ, கொஸ்கம, மின்னேரியா ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய பொலன்னறுவை மின்னேரிய நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். வென் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த மேலும் நால்வர் பொலன்னறுவை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.