கேரள கஞ்சா போதைப்பொருளை கடத்திய நபரொருவர் கற்ப்பிட்டி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கற்ப்பிட்டி பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது குறித்த நபரிடமிருந்து 8 கிலோ 281 கிரேம் கேரள கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா போதைப்பொருளை கடத்திச்செல்ல பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 41 வயதான குறித்த நபர் நுரைச்சோலை கொய்யாவாடி பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.