சீனாவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்குண்டு 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஹொயிலோங் ஜியேன் மாநிலத்திலுள்ள ஹார்பினஸ் நகரிலுள்ள ஹோட்டலொன்றிலேயே தீ ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கிய நபர்களை மீட்கும் பணிகள் பல மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்பட்டன. இதன்போது பலர் காயமடைந்துமுள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லையென சீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பனிச்சறுக்கு விளையாட்டு மற்றும் அங்குள்ள நிலத்தடியிலிருந்து சுடுநீர் வெளியாகுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக இந்நகரானது சுற்றுலாப்பயணிகளின் விருப்பத்திற்குரிய நகராக காணப்படுகிறது. இதனால் அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் வருகைத்தரும் இந்நகரில் குறித்த ஹோட்டல் அமைக்கப்பட்டிருந்தமையால் உயிரிழந்தவர்களில் சுற்றுலாப்பயணிகளும் உள்ளடங்குவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.