திருகோணமலை மூதூர் கிளிவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 110வது மாதிரி கிராமம் இன்றைய தினம் பொதுமக்களிடம் கையளிக்க்பபடவுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் காலை 9 மணிக்கு நிகழ்வு இடம்பெறவுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கிராமத்திற்கு முத்துமாரி நகர் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நிகழ்வுக்கு இணைவாக பல்வேறு நலன்புரி நிகழ்வுகளும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்துள்ளது.