அனர்த்த முன்னறிவித்தல் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பின் கீழ் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டம் அடுத்த மாதம் 5ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் 28 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய விசேட சுனாமி ஒத்திகையொன்று இடம்பெறவுள்ளது. மக்களை தெளிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை இலக்கு வைத்து திட்டம் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.