நாட்டின் பல மாகாணங்களில் 75 மில்லி மீற்றர் வரையான பலத்த மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகமும் அதிகரிக்கலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. மத்திய, வடக்கு, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும். திருகோணமலை, புத்தளம் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.