அரசியல் யாப்பு திருத்தத்தை கொண்டு வந்து தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முயன்றதாகவும் அவர் வேறு எவரும் அதிகாரத்திற்கு வருவதற்கு இடமளிக்க மாட்டார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.