சம்பள முரண்பாடுகளை ஆராய்வதற்கான ஆணைக்குழுவை நியமிக்கும் யோசனை இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். திணைக்களங்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் அரச சேவையாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து ஆராயும் வகையில் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.