சூரியனை ஆய்வு செய்யும் செய்மதியை நாளை விண்ணில் ஏவவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. குறித்த செய்மதியினூடாக சூரியனுக்கு மிக நெருக்கமாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்க்கர் சோலார் புரோப் எனப்பெயரிடப்பட்டுள்ள செய்மதி அமெரிக்க நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சூரியனுக்கு மிக அருகில் அல்லது 40 இலட்சம் மைல்கள் தொலைவில் நின்று ஆய்வுசெய்யமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக சூரியன் மற்றும் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் தொடர்பில் புதிய தகவல்கள் பெற்றுக்கொள்ள முடியுமென நாசா தெரிவித்துள்ளது. செய்மதி சூரிய பரப்பின் 64 இலட்சம் கிலோமீற்றர் பகுதியில் பறந்து ஆய்வுகளை மேற்கொள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்மதியானது ஆயிரத்து 400 செல்சியஸ் வெப்பம் மற்றும் பெரிய கதிரியக்கத்தையும் தாங்க கூடிய வல்லமை கொண்டதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 7 இலட்சத்து 25 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கக்கூடிய திறன்கொண்ட குறித்த செய்மதி சுமார் 6 வருடங்கள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி ஆய்வுகளை மேற்கொள்ளுமென நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.