மூடப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் தவிர்ந்த ஏனைய பீடங்கள் நாளை மறுதினம் மீண்டும் திறக்கப்படவுள்ளன. நேற்றைய தினம் கூடிய பேராதனை பல்கலைக்கழக நிர்வாக சபையினால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.