வாத்துவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வொன்றின்போது நால்வர் உயிரிழந்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏற்பாட்டாளர் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் கடுவலை மற்றும் மாலம்பே பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். கடந்த 4ம் திகதி இரவு இடம்பெற்ற நிகழ்வில் இரண்டாயிரத்துகும் அதிகமான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அவசர நோய்நிலைக்குட்பட்ட நால்வரும் பாணந்துறை ஆதாரய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர். சந்தேக நபர்களை பாணந்துரை நீதவான் நீதமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.