பிரான்ஸின் தென்பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக வெள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பலர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் பணிகளில் 800 இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கென முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.