பஸ்ஸொன்றில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை-மிரிஜ்ஜவெல பகுதியில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றது.பொலிஸாருக்கு கிடைத்த தகவலிலே மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே அங்குனுகொலபெலஸ்ஸ-ஜூலமுல்ல பகுதியைச்சேர்ந்த 21 வயதுடைய குறித்த சந்தேக நபர் தங்காலை பஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி நீதிமன்றம் சென்ற பின்னர் பஸ்ஸில் வீடு திரும்பி கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.