தற்போது தமிழ்நாடு அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற 3 ஆயிரத்து 815 பேர் இந்நாட்டுக்கு வருகை தர விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளது. தயாகத்திற்கு வருவோருக்கு நிரந்தர இடம், வீடு, வாழ்வாதாரம், பிள்ளைகளுடைய கல்விக்கான உதவிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும். மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து மத விவகார அமைச்சின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. யுத்தத்தின் காரணமாக புலம்பெயர்ந்துள்ள அனைவரையும் தயாகத்திற்கு வருமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். சகல இன மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் எடுத்துள்ளதோடு மீள்குடியேறும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுக்க முன்னுரிமை அளிக்கப்படும் என பாராளுமன்றில் தெரிவித்தார்.