தன்னியக்க துப்பாக்கியுடன் அவிசாவளை பகுதியில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புவாக்பிடிய மற்றும் அவிசாவளை பகுதியை சேர்ந்த 26 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர்.
உக்வத்த பொது மயானத்திற்கு அருகில் வைத்து முச்சக்கர வண்டியொன்றை சோதனை செய்த போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.அதேநேரம் இந்த சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.