பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறை தண்டனையை 6 வருடங்களில் கழியும் வகையில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன சிரான் குணதிலக முன்னலையில் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றினை அவதித்தமை உள்ளிட்ட கலகொட அத்தே ஞானசாரவுக்கு எதிரான 4 குற்றப்பத்திரிகைக்களுக்கு அவர் குற்றவாளியென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.