நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான எஞ்சிய போட்டிகளில் பாப் டூ பிளஸி விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3ஆவது ஒருநாள் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட வேளை 10ஆவது ஓவரில் பிடியெடுப்பொன்றை எடுக்க முயற்சித்த வேளை அவரது தோள் பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவேச அவர் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
6 வாரங்கள் ஓய்வு பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் விளையாடமாட்டார்.
ஏற்கனவே 3-0 எனும் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.