திருகோணமலையில் ஆசிரியை ஒருவரை கொலைசெய்த இருவருக்கு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இவ்வழக்கு இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட நான்கு பேரில் முதலாவது மற்றும் இரண்டாவது சந்தேகநபர்கள், ஆசிரியையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைசெய்தமை நிரூபிக்கப்பட்டுள்ளது. 31 மற்றும் 21 வயதுடைய இருவருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதோடு 25 மற்றும் 20 வயதுடைய இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 24ம் திகதி திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாட்டாலிபுரம், சாந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கிடையில் ஆசிரியர் ஒருவரை கொலைசெய்து அவரின் தங்க நகைகளை குறித்த குற்றவாளிகள் களவாடியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.